Tuesday, September 27, 2011

"ஜீன காஞ்சி"-சமண காஞ்சி -திருப்பருத்திகுன்றம் ,காஞ்சி.

                                                   
திருப்பருத்திகுன்றம் ,காஞ்சிபுரத்தில் உள்ளது.இப்பகுதி "ஜீன காஞ்சி"-சமண காஞ்சி என்று அழைக்கப்படுகிறது.

மற்ற இந்து கோயில் போன்ற கட்டிட அமைப்பை கொண்டிருக்கிறது.
சமண மதத்தை தோற்று வித்த மகாவீரரின் உருவச்சிலை கருவறையில் வீற்றிருக்கிறது.மேலும் சுற்றிலும் மற்ற தீர்த்தங்கரர்கள் சிலை உள்ளது.இந்திய தொல்லியல்  துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இப்பகுதியில் வாழும் சில சமண மதத்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் இங்கு வந்து செல்கின்றனர்.

                                 
கோயிலின் மேற் கூரையில் சமண மத,தத்துவ விளக்கங்களும்,குறியீடுகளும் வரையப்பட்டு உள்ளன.மிக எளிமையாகவும்,ஆழமான பொருள் பொதிந்த தலமாக  விளங்குகிறது.பூனைகள் குறுக்கிடும் பூசை அறைகளும்,ஒரு விளக்கு மட்டும் ஒளி பாய்ச்சும் அறைகளும் அழகு.
அலங்காரமும்,பட்டு துணிகளும் மாலைகளும் போர்த்தி,பசனைகள் முழங்கும் இந்து வழிபாட்டில் இருந்து விலகி,ஆடை இல்லாத,அலங்காரம்,அணி மணிகள் இல்லாத 
விட்டு விடுதலையாகிய நிருவான நிலையில் நிலை கொண்டுள்ளார் மகாவீரர்.
                           
சிலையின் சில பகுதிகள் உடைந்து பின்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது.ஓவியங்கள் புதிததாக வண்ணம் ஏற்றிக்கொண்டிருக்க்கிறது.
வைதீக மதத்திற்கு மாற்றாக வந்த மகாவீரரை காண இங்கே செல்லலாம்.பின்புறத்தில் பழைய மரம் ஒன்று உள்ளது.அது பல நூற்றாண்டு கடந்த ஒன்றாக இருக்கக்கூடும்,அதன் அடி மரத்தில் இருந்து கிளைத்து விரியும் இளங்கிளைகள் மரமாகி நிற்கின்றது.

                                  காஞ்சி என்றால்,காமாட்சி,பட்டு,இட்லி மட்டுமில்லாது ,சமணம்,புத்தம், மகாவீரர் என்று காஞ்சி வேறு ஒரு காட்சி அளிக்கிறது.



No comments:

Post a Comment