Wednesday, September 21, 2011

"தச்சூர்.திரு மூக்கன் அய்யா அவர்கள். 'நாங்கூர் காடு'காவலர்.திட்டக்குடி வட்டம்,கடலூர் மாவட்டம்

                                                         


"கொஞ்சம் ஆடுங்க இருக்கு மேய்ச்சலுக்கு,அக்கம் பக்கம் நிலத்த காவல் காக்க சொல்லுவாங்க,இங்க அடிக்கடி காட்டு பன்றி ,மானுங்க எல்லாம் வரத்து உண்டு.அப்பப்ப கூலி வேலையக்கு போறது உண்டு,இப்ப வயசாயிட்ட தால முடியறது இல்லை.
மத்த படி,இங்க யாராவது மரம் வெட்டுனா,ஆடு மாடு மேய்ச்சால்,நான் புகார் சொல்வது உண்டு. அவர்களுக்கு அவதராம் (தண்டனை தொகை ) விதிப்பது உண்டு.அப்ப பாத்து ஆபிசருங்க எதாவது கொடுப்பாங்க ....
இது தாங்க என் வருமானம்,வாழ்க்கை எல்லாம் என்கிறார்."தச்சூர் திரு மூக்கன் அய்யா அவர்கள். 

                               

இவர் ,அய்யா.திரு.மூக்கன்.தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர்.இது கடலூர் மாவட்டம்.சென்னை-திருச்சி நெடுஞ்சாலை,NH-45,திட்டக்குடி வட்டம்,இராமநத்தம்(தொழுதூர்),மேற்கில் உள்ளது.இங்கு நாங்கூர் எனும் கிராமத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதி உள்ளது.இது 'நாங்கூர் காடு' என்று அழைக்கப்பட்டு வருகிறது.இந்த காட்டை தான் இந்த மூக்கன் 
என்பவர் காவல் காத்து வருகிறார்.இது அரசு பணியும் அல்ல.இவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பணியை செய்கிறார்.படிப்பு இல்லாத காரணத்தால் தன்னை நிரந்தரம் செய்ய வில்லை என்கிறார்.

                           (மழை நேரத்தில் ஒதுங்கி காவலிருக்கும் குடிசை).

இவருக்கு காவலுக்கு நிரந்தர மாத ஊதியமாக எதுவும் கிடையாது.மேற்படி எப்பாவது யாராவது வேட்டையாடி அல்லது மரம் வெட்டி பிடிபட்டால் மட்டுமே அரசு சன்மானமாக தருவது உண்டு.வருமானம் இல்லாத போது எப்படி இதை தொடர்கிறிர்கள் என்றால்..'வர்ற ஆபிசருங்க பாத்துக்க சொல்றாங்க' நாமும் பழகிட்டோம்.
இதுவே புடிச்சி போச்சி.இனி வேற எந்த வேலைக்கு போகறது என்கிறார்.
                               

        




                                  (கிளா க்காய்)



மக்களும் இவரையே ஏற்று கொண்டு விட்டார்கள்.இவரது பேச்சுக்கு கட்டுப்படவும் செய்கிறார்கள்.இந்த காட்டில் உள்ள அனைத்து வகையான மரங்கள்,செடிகள்,விலங்குகள் அனைத்தும் இவரது அறிவு களஞ்சியம்.இதன் வனத்துறை காவலருக்கு கூட தெரியுமா என்பது ஐயமே.இந்த சித்திரை மாதம் போட்ட பனை கொட்டைகள் முளைத்து கன்றுகளாக வந்து உள்ளது.அதை பெருமிதமாக நம்மிடையே அழைத்து காட்டுகிறார்.நமக்கும் பெருமிதமாக உள்ளது.
                                                            (ஆவாரம் பூ )
எந்த ஒரு பெரிய எதிர் பார்ப்பும் இல்லாமல்,மனிதர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் திரு.மூக்கன் போன்ற சிலர்.
இவர்களால் தான் வானம் மண்ணில் இன்னும் மழை பெய்கிறது.ஆம் இவர் போன்ற நல்ல உள்ளங்களுக்க்காகவும்,இவர் காக்கும் காடுகளுக்காகவும்.

                                              

No comments:

Post a Comment