Tuesday, September 20, 2011

நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா..............

                      
                                                
 
என்ன பெத்த ராசா 
நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா....

பேரா...
பவுனு,காசுன்னு எதுவும் வேண்டாம் 
பாடைய நிறைக்க பூவு மட்டும் போதும் 

பட்டு புடவையும்,பட்டணத்து சேலையும் வேண்டாம் 
எம் பாடைய மறைக்க பார்டர் வச்ச சேலை போதும்

பக்கத்து ஊரு மேளம் வேண்டாம் 
ஊரை கூட்டும் ஒப்பாரியும் வேண்டாம் 
எந் தலை மாட்டுல கொஞ்சம் நேரம் நின்னா போதும் 


எம் பேரா..
வேட்டுச் சத்தமும்,வெட்டிச் செலவும் வேண்டாம் 
இருக்கும் போதே இரைச்சல் இல்லை 
இறந்த பின்னே சத்தம் எதுக்கு 

யாரு வராவிட்டாலும் பரவாயில்லை 
பேரா.. நீ
காரு ஏறி வந்து விடு...

பேரு சொல்ல பேரன் இருக்கான்னு ஊரு சொல்ல 
எந்த தேசம் போயிருந்தாலும்,எட்டி வந்து விடு ...

என் கட்டையா புதைக்கும் வரை 
கிட்டயே இருந்து விடு ..

பேரா..
பழைய துணியில முடிஞ்ச சேதி ஒன்னு 
அடுக்கலயில காத்திருக்கும் 
அப்புறமா திறந்து பாரு.............
எம் பேரா..
நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா...


                                    
                                             

No comments:

Post a Comment