Saturday, October 8, 2011




                    

ஒரு பனை ஓலை என்பது 
ஓர் இலை
ஓர் இலை என்பது 
ஓர் இலை மட்டுமே அன்று 

ஓலையின்  ஒரு கீற்று 
காற்றாடியாகலம் 
ஒற்றை ஓலை ஒரு  
கைவிசிறியாகலாம்

நூறு ஓலைகள் 
ஒரு குடிசையாகும் 
ஒரு ஓலையில் 
பல பறவைகள் கூடு கட்டலாம்

பல ஓலைகள் தலையசைக்க 
பனை மரம் விசிறியாகிறது
புவி கொஞ்சம் காற்று வாங்கலாம்  

ஓலைகள் உரசிட 
இசை பிறக்கலாம் 
ஓர் உயிர் உறங்கிடலாம்

இந்த இலை 
இல்லையென்றால் 
எழுத்தை இழந்திருக்கலாம் 

ஒரு பனை ஓலை என்பது 
ஓர் இலை
ஓர் இலை என்பது 
ஓர் இலை மட்டுமே அன்று ......

No comments:

Post a Comment