Monday, September 3, 2012

ஆடிப்போன ஆவணி,ஆளை மயக்கும் தாவணி ...பாட்டு கீட்டு பாட முடியாது.ஆடியும் போச்சுன்னா விவசாயிக்கு வெறும் துணி..தான். .



                            


                            
படம்-இடம் வாகையூர் கிராமம்.31-08-2012.


ஆடி மாசம்,மழை பெய்ஞ்சா விதைக்கலாம்னு காத்திருந்த பெரியாப்பா,மழை வராதது கண்டு வெறுத்து போனார்.இருந்தாலும் ஒரு தூறல் விழுந்த மறுநாள்,கலப்பைய பூட்டினார்.ஒரு அடி உழவு ஓட்டி,எருவை கலைச்சு விட்டால்,அடுத்து 
ஒரு நல்ல மழை பேயும் நாளில் விதைத்தால் மட்டும் போதும், பயிறு நல்ல கிளம்பும் ,என்று காட்டுக்கு போனார்.எல்லா வேலையும் முடிச்சு வரும் வேளையில் ஒரு பட்டு போன ''நுணா'' மரத்தின் வேரை கிளற அங்கே மண்ணையும்,மரத்தையும் அறிச்சபடி கரையான் கிடந்துச்சி.....அட என கொஞ்சம் மண்ணோடு,கரையன்களையும் அள்ளிவந்து கோழி குஞ்சுகளுக்கு போட்டார்.
அத தான் கோழி குஞ்சுக கொத்தி கொத்தி தின்னுதுக.மழை வர்ற வரை மத்த வேலைகள பாக்க வேண்டியதுதான்.

நாம climate change,Global warming ன்னு பேசிக்கிட்டு Facebooka கிழ்ச்சிகிட்டு இருக்கலாம்.
ஆடிப்போன ஆவணி,ஆளை மயக்கும் தாவணி ...பாட்டு கீட்டு பாட முடியாது.
ஆடியும் போச்சுன்னா விவசாயிக்கு வெறும் துணி..தான்.
 

No comments:

Post a Comment